அன்பர் தினத்தில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா நிச்சயதார்த்தம்

திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி மாதம் வரும் அன்பர் தினத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘கீதா கோவிந்தம்’ படம் தெலுங்கில் மட்டுமன்றி தமிழிலும் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’ படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்தது. அதன்பிறகு ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. எனினும், வெளிநாடுகளில் ஒன்றாகச் சுற்றி வருவதாக செய்தி பரவியது. “நாங்கள் இருவரும் நண்பர்கள்தான், காதலர்கள் அல்ல,” என்று இருவரும் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் பிப்ரவரி மாதத் துவக்கத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளி வந்துள்ளன.

இப்போதும் இந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!