சாய் பல்லவி சீதையாக நடிக்கும் ‘ராமாயணம்’ படத்தின் சில புகைப்படங்கள் கசிந்துள்ளன. இதனால் படத்தின் இயக்குநர் நித்திஷ் திவாரி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும் இப்படம், பெரும் பொருள் செலவில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் ரன்பீரும் சீதையாக நடிக்கும் சாய் பல்லவியும் நடந்து செல்லும் காட்சி புகைப்பட வடிவில் வெளியாகி உள்ளது.
அவற்றைக் கண்ட ரசிகர்கள் சாய் பல்லவியைப் பார்க்கும்போது அவர் சூர்ப்பணகைபோல் காட்சி அளிப்பதாக கிண்டல் செய்துள்ளனர். அதேபோல் ரன்பீர் கபூரிடம் ராமருக்கு உண்டான கலை அறவே தென்படவில்லை என்றும் கிண்டல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, சாய் பல்லவி யின் ரசிகர்களும் களமிறங்கி உள்ளனர். திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும்கூட சாய்பல்லவி சீதா தேவியைப் போல் கருணையும் அழகும் கொண்டவர் என்று அவரை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
“சீதை கதாபாத்திரத்திற்கு அவரை விட பொருத்தமானவர் இருக்க மாட்டார்கள். இந்தப் படத்திலும் சீதை கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவர் சாய்பல்லவி.
“அவரது அழகு, துணிச்சல், அர்ப்பணிப்பு, அமைதி உள்ளிட்ட தெய்வீக அம்சங்கள் அவரை மேன்மேலும் அழகாக்கி வருகின்றன,” என்று ரசிகர்கள் சாய் பல்லவிக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.