பணிநீக்கம் செய்த அதிகாரியைக் கொலை செய்த ஆடவர்

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநில அரசாங்க அதிகாரியைக் கொலை செய்ததாக அவருடைய ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிரத்திமா, 45, என்ற அப்பெண் அதிகாரி கர்நாடகச் சுரங்க, நிலவியல் துறையில் பணியாற்றி வந்தார். அவர் பெங்களூரில் பணியாற்றி வந்த நிலையில், அவருடைய கணவரும் மகனும் சிவமோகாவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரத்திமா கழுத்தறுபட்ட நிலையில் தமது வீட்டில் மாண்டு கிடந்தது கடந்த ஞாயிறு காலை 8.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே, பிரத்திமாவைக் கொலை செய்ததை அவரிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்த கிரண் என்ற ஆடவர் ஒப்புக்கொண்டார். கிரண் கடந்த ஐந்தாண்டுகளாக அரசாங்க ஒப்பந்த ஊழியராக இருந்து வந்த நிலையில், பிரத்திமா அண்மையில் அவரைப் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்து, அவரைக் கொலைசெய்ததாக கிரண் காவல்துறையிடம் கூறினான்.

பிரத்திமாவைக் கொலைசெய்தபின் அவன் பெங்களூரிலிருந்து ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவிலுள்ள சாமராஜநகருக்குத் தப்பியோடியதாக என்டிடிவி செய்தி தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!