கறையானுக்கு இரையான 18 லட்ச ரூபாய்

லக்னோ: வங்கியில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்திருந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த ரூ.18 லட்சத்தையும் (S$29,700) கறையான் அரித்துவிட்டது.

இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் நிகழ்ந்தது.

அல்கா பாட்டக் என்ற அப்பெண் வாடிக்கையாளர், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக அப்பணத்தையும் சில நகைகளையும் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தார்.

தன் மகளின் திருமணத்திற்காக அவர் அதனைச் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், பாதுகாப்புப் பெட்டக வருடாந்திரப் பராமரிப்பை ஒட்டி, அண்மையில் அதனைத் திறந்து பார்த்தபோதுதான் மொத்த பணத்தையும் கறையான் தின்று முடித்திருந்தது தெரியவந்தது.

அதுகுறித்து அவர் உடனடியாக அவ்வங்கிக் கிளை மேலாளரிடம் தகவல் தெரிவித்தார். மேலாளரும் உடனே உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி, நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்பட்டது.

பணத்தை எப்படிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருக்க வேண்டும் என அவர் அறிந்திருக்கவில்லை என்று இந்தியா டுடே செய்தி கூறியது.

முன்னதாக, இவ்வாண்டு பிப்ரவரியிலும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்த ரூ.2.15 லட்சமும் முற்றிலுமாகச் சிதைந்துபோனது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!