எங்கிருந்தோ வந்த பணத்தால் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

புவனேஸ்வர்: அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று சொல்வார்கள்.

அப்படி ஒரு சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் 549 கிளைகளுடன் கிட்டத்தட்ட 5.5 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது ஒடிசா கிராமிய வங்கி.

அங்குள்ள கேந்திரபாரா நகரில் இருக்கும் அவ்வங்கிக் கிளையின் வாடிக்கையாளர்கள் பலரது கணக்குகளில் திடீரெனப் பணம் வரவு வைக்கப்பட்டது. அக்கணக்குகளில் பணத்தை யார் போட்டார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

ஆயினும், தங்களது கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டதை அறிந்த வாடிக்கையாளர்கள், வெள்ளிக்கிழமை காலை அவ்வங்கி திறந்ததும் பணத்தை எடுக்க விரைந்ததால் அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.

இதனால் திகைப்படைந்த அவ்வங்கிக் கிளையின் மேலாளர், 300 கணக்குகளைச் சோதித்துப் பார்த்ததாகக் கூறினார்.

“பணம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய முயன்று வருகிறோம். வாடிக்கையாளர்களின் கணக்குகளில் யார், எதற்காகப் பணம் போட்டனர் என்பது தெரியவில்லை. ஆனாலும், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாகப் பணத்தை எடுத்துச் செல்கின்றனர்,” என்று அவர் விளக்கினார்.

ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.30,000லிருந்து ரூ.2 லட்சம் வரை போடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இப்படி நாற்பதுக்கும் மேற்பட்ட கணக்குகளில் பணம் போடப்பட்டிருந்ததாக ஒடிசா ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!