கர்நாடகாவின் பல பகுதிகளில் கனமழை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்து வருகிறது.

கொப்பல், கலபுரகி, பீதர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலும் தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

பெங்களூரில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை வரை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. மேலும் சுரங்க சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நிலைகுத்திப்போயின.

கலபுரகி மாவட்டத்தில் உள்ள பெனகனஹள்ளி என்னும் சிற்றூரில் இரவு முழுதும் பெய்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. யாதகிரியில் உள்ள பீமா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் கொல்லூர் மற்றும் மதரக்கல் ஆகிய சிற்றூர்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!