காங்கிரஸ் பிரமுகரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்த தாய், சகோதரர்

காங்கிரஸ் கட்சியின் கருங்குளம் வட்டார செயலாளரான 30 வயது மாரி செல்வம் தாய், சகோதரரால் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஆகஸ்ட் மூன்றாம் தேதி மாரிசெல்வத்திற்கும் அவரது தம்பி மணிகண்டனுக்கும் சொத்து குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மணிகண்டனுக்கு உதவியாக தாயார் லெட்சுமியும் இருந்துள்ளார். இதில் லெட்சுமியும் மணிகண்டனும் உருட்டுகட்டையால் மாரி செல்வத்தினை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த மாரி செல்வத்தினை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த மாரிசெல்வம் புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, மணிகண்டன் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!