150 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில்

கோல்கத்தா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாரியாவில் உள்ள ஒரு பள்ளியில் கிட்டத்தட்ட 150 மாணவர்கள் உடல்நலக் கோளாறுகள் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பள்ளி இருக்கும் இடம் மேற்கு வங்கத்திற்கும் பீகார் மாநிலத்திற்குமான எல்லையில் உள்ளதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை அன்று மாணவர் விடுதியில் இரவு உணவு உண்ட பிறகு மாணவர்கள் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நச்சுணவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

மாணவர்கள் வயிற்றுவலி, வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.

உணவில் பல்லி விழுந்ததாக மாணவர்கள் சிலர் புகார் கூறியுள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர், அவர்கள் இரண்டு நாள்களுக்கு கண்காணிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!