புதுடெல்லி: இந்தியா முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை 1-10-2023 நடைபெறுகிறது.
இந்தத் திட்டத்தில் இந்திய நாட்டவர் ஒவ்வொருவரும் தானாகவே முன்வந்து பங்காற்ற வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
“அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு, இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக அனைவரும் ஒன்றுகூடுவோம். இந்தியா தூய்மையான நாடாகத் திகழ்வது அனைவரின் பொறுப்பாகும். இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும் திட்டமும் முக்கியமானது. தூய்மையான இந்தியாவை இலக்காகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தூய்மைப் பணிகளுக்கு மகாத்மா காந்தி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால் அவர் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.