மோடி: காங்கிரஸ் கட்சியினர் கோபத்தில் உள்ளனர்

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் இவ்வாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், பாஜக சார்பில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளனர். பெண்களை சாதி ரீதியாக பிளவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் முயற்சி செய்கிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆயிரம் ஆண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

“ஏழைகளுக்கு காங்கிரஸ் கட்சியைப் போல் வேறு எந்தக் கட்சியும் அநீதி இழைத்ததில்லை. கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்க உத்தரவிட்டேன். ஆனால் சத்தீஸ்கர் அரசு அதிலும் ஊழல் செய்தது. சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அனைத்து ஏழை மக்களுக்கும் தரமான வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே முதல் முடிவாக இருக்கும்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!