கேரளாவில் தொடர்மழை; பல பகுதிகளில் அபாய எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கனமழை நீடிப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கனமழை மேலும் ஐந்து நாள்களுக்கு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் புதன்கிழமையும் மழை தொடர்ந்து பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால், மாநிலத்தில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து அபாயகட்டத்தை எட்டியுள்ளது.

உயிரிழப்பு பற்றி இன்னும் தகவல் கிடைக்காத நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி வாமனபுரம் ஆற்றில் ஒருவர் காணாமல் போனார், அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளத்தில் ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும். கனமழை காரணமாக, திருவனந்தபுரத்திற்கு அதிக கனமழையைக் குறிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமையும் தீவிர வானிலை நிலவரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அடுத்த 4 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!