குமரியில் தொடர் மழை: வெள்ளப் பெருக்கால் 2 நாள்களில் 5 பேர் உயிரிழப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமையும் மழை நீடித்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மாவட்டம் முழுவதும் குளிரான வெப்பநிலை நிலவி வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. புதன்கிழமை பகலில் மிதமான மழை பெய்தது.

மாவட்டம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு புதன்கிழமை 2வது நாளாக விடுமுறை விடப்பட்டது.

பாலமோர், பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், சுருளோடு, தக்கலை, குளச்சல், மாம்பழத்துறையாறு, திற்பரப்பு, கோழிபோர்விளை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருக்கிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் கொட்டித் தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பழையாறு, கோதையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணியாறு உட்பட மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுசீந்திரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுசீந்திரம் சோழன்திட்டை தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் வாழை, மரவள்ளி, தென்னை, ரப்பர் போன்ற தோட்டக்கலைப் பயிர்களும், மலைப் பயிர்களும் சேதமடைந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 30.80 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு 1,546 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 274 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது.

அணைகளின் நீர்மட்டம்

அணைக்கு 1,564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.27 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 24.61 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 3 நாளில் 10 அடியாக உயர்ந்துள்ளது. மழை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை நீர்ஆதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

மாங்காடு - முஞ்சிறை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. திக்குறிச்சியில் குடியிருப்புகளையும், குலசேகரம், அருமனை, சுருளோடு, தடிக்காரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தாழக்குடி அருகே மீனமங்கலம் பகுதியில் வீடு இடிந்து ஒருவர் இறந்தார்.

ஆற்றூர் பகுதியில் மழை பாதிப்பால் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். தக்கலை அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி இறந்தார். இதனால் இரு நாள்களில் மழை பாதிப்புக்கு குமரி மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!