உச்ச நீதிமன்றம்: பீகாரின் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு தடை விதிக்க முடியாது

புதுடெல்லி: பீகார் மாநில அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்றம், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பீகார் அரசுக்கு அனுமதி வழங்கியது.

அதன்படி பீகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் விவரங்களை அம்மாநில அரசு வெளியிட்டது.

இந்நிலையில், பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சாதிவாரி கணக்கெடுப்பின் தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பான கூடுதல் தகவலை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என அந்த மனுக்களில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அந்த மனுவை கடந்த சனிக்கிழமையன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பார்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.

அப்போது, “சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக மாநில அரசுகளின் முடிவை எங்களால் தடுக்க இயலாது. ஆனால், கணக்கெடுப்பின் தரவுகளில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பினும், அதுகுறித்து விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

பீகார் அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது. அதேநேரம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தை பீகார் அரசு வெளியிட்டதற்கான காரணத்தை பீகார் அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உ.பி.யிலும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்து

பீகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு வெளியானதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி வருகிறார்.

இச்சூழலில், ஏறத்தாழ 22 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை நினைவுகூர்ந்து அரசியல் விவாதங்கள் தொடங்கி உள்ளன.

உ.பி. நகரங்களில் உயர்சமூகம் 32%, ஒபிசியினர் 21.96%, தலித்கள் 15.27% வசிப்பதாக அறிக்கை வெளியானது. 22 வருடங்களுக்கு முன்பான இந்த எண்ணிக்கை தற்போது கண்டிப்பாக உயர்ந்திருக்கும் என்பது அரசியல் கட்சிகளின் கணிப்பாக உள்ளது.

இந்த சூழல், சாதிகளின் அடிப்படையில் அரசியல் செய்யும் உ.பி. கட்சிகளுக்குச் சாதகமாக உள்ளது. எனவே, பாஜக ஆளும் உ.பி. அரசை, சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த உ.பி.யைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையை நவம்பர் மாதத்தில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!