சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பாஜக தயக்கம் காட்டுவது ஏன் - காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டுவது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்திலிட்ட பதிவில், “இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது ராஜஸ்தானில் பல்வேறு தரப்பினரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.

“அதன்படி இப்போது காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் கெலாட் அறிவித்துள்ளார். மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு இந்த நடவடிக்கையை காங்கிரஸ் எடுத்துள்ளது.

“இதன்மூலம் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் மேம்பாட்டுக்கென கொள்கைகள் வகுக்கப்படும். மக்கள்தொகை அடிப்படையில் சமூகநீதி சாா்ந்த கொள்கைகளை வகுப்பது அவசியம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இதுபோன்ற கணக்கெடுப்புகள் பாஜகவினர் ஆளும் மாநிலங்களில் எடுக்கப்படுவதில்லை என்ற கேள்வி எழுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி பேசாமல் இருப்பது ஏன் என்பதும் தெரியவில்லை,” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!