உத்தராகண்ட்டில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு, பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என மாநிலப் பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

நைனிடாலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த பேருந்து, கலதுங்கிச் சாலையில் காட்காட் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மாநிலப் பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத் துறை, நைனிடால் காவல்துறையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

காயமடைந்தவர்கள் ஹல்த்வானியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புனேயில் விபத்து

இன்னொரு சம்பவத்தில், புனேயில் நடந்த மினி பஸ் விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். அந்தப் பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகளில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை இரவு 2 மணி அளவில் வரந்தா காட் என்ற இடத்தில் உள்ள போர் - மகாத் சாலையி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!