சென்னை: செம்மஞ்சேரியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அதிநவீன விளையாட்டு நகரத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை தமிழ் நாடு அரசு பரிசீலித்து வருகிறது.
உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள நிறுவனங்கள் நவம்பர் 14ஆம் தேதிக்குள் www.tntenders.gov.in என்ற இணையத் தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக சென்னை திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.