பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் ஒன்றுபட இந்தியா வலியுறுத்து

தேஜ்பூர்: பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் ஒன்றுபட வேண்டும் என்று இந்தியாவின் மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் குறித்து இவ்வாறு கருத்துரைத்த அவர், இந்தப் பிரச்சினையில் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றார்.

முன்னதாக, இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு அமைச்சர் ராஜ்நாத் சிங் அசாமுக்கும் அருணாச்சலப் பிரதேசத்திற்கும் சென்றார்.

திங்கட்கிழமை (அக். 23) அவர் அசாமில் உள்ள இந்திய ராணுவத்தினரைச் சந்தித்துப் பேசினார். தேஜ்பூரில் இந்திய ராணுவப் பிரிவினர் அளித்த விருந்தில் அவர் கலந்துகொண்டார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திரு ராஜ்நாத் சிங், “பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் ஓரணியில் ஒன்றுபட்டால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்,” என்றார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை இந்தியா, 38 டன் நிவாரணப் பொருள்களை காஸா எல்லைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தமது பயணத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை, அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய ராணுவத்தினருடன் தசரா திருவிழாவைக் கொண்டாடினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!