வாயோடு வாய் வைத்து பாம்பைப் பிழைக்க வைத்தவர்

நர்மதாபுரம்: மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் பகுதியில், காவல்துறை அதிகாரி அதுல் சர்மா, மூச்சற்ற நிலையிலிருந்த பாம்பைப் பிழைக்க வைத்துள்ளார்.

பாம்பின் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்றைச் செலுத்தி அவர் பிழைக்க வைத்த காணொளி இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நர்மதாபுரம் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர்க் குழாய் ஒன்றில் அந்தப் பாம்பு புகுந்தது. விஷத்தன்மையற்ற பாம்பு அது.

குழாயிலிருந்து பாம்பை வெளியேற்ற அங்கு வசிக்கும் மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.

அதனால் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த தண்ணீரைக் குழாய்க்குள் ஊற்றினர். பின்னர் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர்.

அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி அதுல் சர்மா, தனக்குப் பாம்புகளை மீட்ட அனுபவம் உண்டு என்றார். பாம்பை நன்கு பரிசோதித்த அவர் அதன் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்றைச் செலுத்தினார்.

பாம்பு சிறிது நேரத்தில் அசையத் தொடங்கியது. சுற்றியிருந்தோரின் கரவொலிக்கிடையே 15 ஆண்டுகளாக இதில் தனக்கு அனுபவம் உண்டு என்றார் அதுல் சர்மா.

இச்சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவிவருகிறது.

உரிய பயிற்சி இல்லாமல் யாரும் இத்தகைய செயலில் இறங்கவேண்டாமென இணையவாசிகள் பலரும் பின்னூட்டமிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!