திருப்பதி: தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திருப்பதிக்கு செல்ல உள்ளதாகப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் பயணத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கட ரமணா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, பாதுகாப்புப் பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.