‘பயங்கரவாதத்தைத் தன் துணிச்சலால் இந்தியா ஒடுக்கி வருகிறது’

புதுடெல்லி: பயங்கரவாதத்தை இந்தியா துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மனத்தின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

அவர், மும்பை தாக்குதல் குறித்தும் அதிலிருந்து இந்தியா மீண்டு வந்தது குறித்தும் பேசியுள்ளார். 26/11 மும்பையில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது அஞ்சலியை செலுத்தியதுடன் இந்தியா அவர்களை என்றும் நினைவுகூரும் எனத் தெரிவித்துள்ளார்.

“நவம்பர் 26ஆம் தேதியை நம்மால் மறக்க முடியாது. இந்த நாடு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்ட நாள். பயங்கரவாதிகள் மும்பையை மட்டுமில்லாது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்வுக்குள்ளாக்கினர். அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு வந்ததும் இப்போது முழு துணிச்சலோடு பயங்கரவாதத்தை எதிர்ப்பதும் இந்தியாவின் திறனால் நடந்தவை,” எனப் பேசியுள்ளார்.

லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்துசென்று நவம்பர் 26, 2008 அன்று துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினர். இதில் 18 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 166 பேர் பலியாகினர். மும்பையில் 60 மணி நேரம் நீடித்த இந்த முற்றுகையில் பலர் காயமுற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!