சண்டிகார்: பாகிஸ்தானில் ஏவப்பட்ட ஆளில்லா விமானம் (டிரோன்) ஒன்றை இந்தியாவின் பஞ்சாப் எல்லையில் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
அத்துடன், பாகிஸ்தானில் கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோ ஹெராயின் போதைப்பொருள்களும் ஒரு துப்பாக்கியும் அதிரடிச் சோதனையில் சிக்கியதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இது குறித்து பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்கள் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், நவ.26 அதிகாலையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அமிர்தசரசில் உள்ள சக் அல்லா பக்ஷ் கிராமத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், ஒரு பாகிஸ்தான் டிரோன், பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோ ஹெராயின் மற்றும் ஒரு பிஸ்டன் துப்பாக்கியுடன் 20 துப்பாக்கிக் குண்டுகளைக் கொண்ட 2 மேகசின்களும் கைப்பற்றப்பட்டதாக பஞ்சாப் எல்லைக் காவல் படையினர் தங்களது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 10 மாதத்தில் மட்டும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த 69 பாகிஸ்தான் டிரோன்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் பெரும்பான்மை டிரோன்கள் போதைப் பொருள் கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.