புதுடெல்லி: மோசமான வானிலை காரணமாக டெல்லிக்கு வந்து இறங்க வேண்டிய விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. சனிக்கிழமை 7.30 மணி முதல் கிட்டத்தட்ட 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் பயணம் செய்த விமானமும் ஜெய்ப்பூருக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. அதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.