புதுடெல்லி: ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் காரணமாக ‘ இண்டியா’ கூட்டணியின் அடுத்த ஆலோசனைக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அடுத்த ஆலோசனை கூட்டம் வருகிற 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘ இண்டியா’ கூட்டணி தலைவர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த அழைப்பினை ஏற்று, அவர் வருகிற 6ஆம் தேதி டெல்லி செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.