மயானச் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உட்பட நால்வர் உயிரிழப்பு

பதைபதைக்க வைக்கும் காணொளி!

சண்டிகர்: ஹரியானாவில் உடல்களை எரியூட்டும் தகன மேடை சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி உட்பட நால்வர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி மக்களைப் பதைபதைக்க வைத்துள்ளன.

ஹரியானா மாநிலம், குருகிராம் அருகே உள்ள அர்ஜுன் நகரில் எரியூட்டு மயானம் ஒன்று உள்ளது. அதனைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. சுவரின் பக்கத்தில் சடலங்களை எரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சுற்றுச்சுவர் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தான்யா, 11, தேவி தயாள், 70, மனோஜ் காபா, 54, கிருஷ்ணகுமார், 52, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவத்தைக் கண்டு பதறியவர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்த நால்வரது உடல்களையும் மீட்டனர்.

படுகாயம் அடைந்த தீபா பிரதான் என்பவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளின் பாரம் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காவலர்களின் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!