சிங்கப்பூரின் பொதுப்போக்குவரத்து மேம்பாடுகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதைப் பகிர்ந்துகொள்ள தக்க தளம் ஒன்று வேண்டுமா? உங்களுக்காகவே வரும் 26ஆம் தேதி யன்று தமிழ் முரசு நாளிதழுடன் இணைந்து நிலப் போக்குவரத்து ஆணையம் கருத்துச் சேகரிப்புக் கலந் துரையாடல் ஒன்றை நடத்தவிருக்கிறது. அக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பொதுப் போக்குவரத்து குறித்த உங்களது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நியூஸ் சென்டரில் அமைந்துள்ள 'டிரெய்னிங் ரூம்' என்ற பயிற்சி அறையில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி காலை 9.30 முதல் 11.30 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி தனலட்சுமி கலந்து கொள்வார். பங்கேற்பவர்களுக்குச் சிறப்பு அன்பளிப்பு கள் காத்துக்கொண்டிருக்கின் றன. வரும் 23ஆம் தேதி பதிவிற்கான இறுதி நாள். அதனால் தாமதம் வேண்டாம். உடனே svenga@sph.com.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 6319 4009, 6319 4063 ஆகிய எண்களுக்கோ தொடர்புகொண்டு உங்கள் வருகையைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.
நிகழ்ச்சி விவரங்கள்
இடம்: தோ பாயோ நார்த், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ், நியூஸ் சென்டர், 'டிரெய்னிங் ரூம்'
நாள்: 26 ஜனவரி 2019, சனிக்கிழமை
நேரம்: காலை 9.30 முதல் 11.30 வரை
விண்ணப்ப விவரங்கள்: svenga@sph.com.sg, 6319 4009, 6319 4063 விண்ணப்பத்திற்கு இறுதி நாள்: 23 ஜனவரி 2019