தேசிய படகோட்ட நிலையத்துக்கு அடுத்துள்ள கட்டுமானத் தளத்தில் அங்குள்ள குத்தகை ஊழியர்கள் முதலையைக் கண்டதாக தகவல்கள் இணையத்தில் பரவியதை அடுத்து அங்கு நீர் தொடர்பான விளையாட்டுகளும் பயிற்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தேசிய பூங்காக் கழகத்துடனும் முதலைகள் தொடர்பான நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகு, அந்தப் பகுதியில் முதலை இல்லை என்று உறுதியான பிறகு, இன்று முதல் அங்கு நீர் தொடர்பான பயிற்சிகள் மீண்டும் தொடங்கும் என்று சிங்கப்பூர் படகோட்ட சம்மேளனம் நேற்று தெரிவித்தது.
"அங்கு கடந்த திங்கட்கிழமைக்குப் பிறகு முதலைகள் தென்பட்டதாக தகவல் இல்லை," என்று கூறிய தேசிய பூங்காக் கழகத்தின் பேச்சாளர், "அந்தப் பகுதியை ரோந்துப் படகுகள் அவ்வப்போது கண்காணித்து வருகின்றன. படகைக் கடலுக்குள் செலுத்துதல், மீண்டும் அதை கரைக் குக் கொண்டு வரும் நடைமுறைகள் ஆகியவற்றுடன் கூடு தல் கடற்கரை ஆதரவு மற்றும் நீர் காவல் போன்றவையும் முடுக்கி விடப்பட்டுள்ளன," என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.