அமெரிக்காவைக் குறைத்து மதிப்பிடவோ சீண்டிப் பார்க்கவோ வேண்டாம் என்று வடகொரியாவுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசியப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று சீனாவுக்குப் புறப்படுமுன் தென்கொரிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். "பொல்லாத பாதையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் உங்களுக்கு இன்னல் ஏற்படுவதை அதி கரிக்கும்," என்று வடகொரியத் தலை வரைக் குறிபிட்டு திரு டிரம்ப் பேசினார். "வடகொரியா என்பது உங்களது பாட்டனின் கற்பனையில் உருவான சொர்க்கம் அல்ல. யாரும் சொந்தம் கொண்டாட முடியாத நரகம் அது.
சிறந்த எதிர்காலத்துக்கான பாதையைக் காட்டுகிறோம். "உங்களது பகைமைப் போக்கிற்கு முடிவுகட்டும் தொடக்கமாக அது இருக் கும். கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவு கணைகளை உருவாக்கும் செயலைக் கைவிட்டு முழு அளவில் அணுவாயுதமற்ற நிலையை ஏற்படுத்துங்கள்," என்று வட கொரியத் தலைவரை அமைதிப் பேச்சுக்கு மறைமுகமாக அழைப்புவிடுத்தார் டிரம்ப். அவர் நிகழ்த்திய அரை மணி நேர உரையின் முடிவில் பார்வையாளர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டிரம்ப்பின் 12 நாள் ஆசிய சுற்றுப் பயணத்தில் வடகொரியாவின் அணு வாயுத நெருக்கடியே முக்கிய இடம் பெற்று வருகிறது.