மார்ச் மாதத்தில் கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலைகள் அதிகரிப்பு

கடந்த மார்ச் மாதத்தில் கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.4 விழுக்காடு அதிகரித்தன.

கடந்த பிப்ரவரி மாதம் சந்தை மீண்டுவந்ததைத் தொடர்ந்து, அதிகமான வீடுகளும் விற்பனையாயின.

பிப்ரவரி மாதம் பதிவான 0.2 விழுக்காட்டு அதிகரிப்பைக் காட்டிலும், விலை அதிகரிப்பு சற்று உயர்வாக இருந்ததாக ‘ஸ்ஆர்எக்ஸ்’ நிறுவனமும், 99.co என்ற நிலச்சொத்து இணையவாசலும் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டின.

வீடு வாங்குவோருக்கும் விற்பவர்களுக்கும் இடையே விலை எதிர்பார்ப்புகளில் காணப்பட்ட வேறுபாடுகளும், உயர்வான வட்டி விகிதமும் விலை ஏற்றத்திற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று சொத்து நிபுணர்கள் கூறினர்.

இதற்கிடையே, கடந்த மார்ச் மாதத்தில் மறுவிற்பனை செய்யப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை 17.4 விழுக்காடு அதிகரித்தது.

மார்ச்சில் 883 வீடுகள் கைமாறின. பிப்ரவரியில் அந்த எண்ணிக்கை 752ஆக இருந்தது.

மார்ச்சில் கெப்பல் பேயின் ‘கோரல்ஸ்’ல் உள்ள வீடு ஒன்று, ஆக அதிக விலையில், $8.7 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!