சட்டவிரோதமாக $1.2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள காண்டாமிருகக் கொம்புகளைச் சிங்கப்பூர் வழியாக லாவோசுக்கு கடத்த முயன்ற தென் ஆப்பிரிக்க நாட்டவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.
இது குறித்து, தேசிய பூங்காக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை வனவிலங்கு உடல் பாகங்கள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனைகளில் இதுதான் அதிகபட்ச தண்டனை என தேசிய பூங்காக் கழகம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட 33 வயது தென் ஆப்பிரிக்கரின் பெயர் குமேட் ஸ்தெம்பிசோ ஜோயல்.
அருகிவரும் உயிரினங்கள் (இறக்குமதி மற்றும் ஏற்றுமதி) சட்டம் 2006ன் அடிப்படையில் தம்மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை ஜோயல் ஒப்புக்கொண்டார்.
அவர் இக்குற்றத்தை 2022ஆம் ஆண்டு புரிந்தார் என்றும் சிங்கப்பூர் வழியாக லாவோசுக்குப் பயணித்த போது அவர் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
குமேட், தனது சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து 2022ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி அன்று சாங்கி விமான நிலைய முனையம் 1 க்குச் சட்டவிரோதமாக 20 காண்டாமிருகக் கொம்புகளை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் 32 கிலோ எடையுள்ள இந்த 18 கொம்புகள் வேட்டையாடப்பட்ட அருகி வரும் 15 வெள்ளை காண்டாமிருகங்களின் கொம்புகள் எனக் கூறப்பட்டது.