விற்பனைகளை ரத்து செய்யவிருக்கும் மிட்சுபிஷி நிறுவனம்

சிங்கப்பூரில் மிட்சுபிஷி கார் விற்பனை அடுத்த ஆண்டு ரத்துசெய்யப்படும். வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் மறுஆய்வுசெய்யப்பட்ட கரிம வெளியேற்றத் திட்டமே அதற்குக் காரணம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

இந்த மாற்றம் தற்போதுள்ள கார் உரிமையாளர்களைப் பாதிக்காது. மிட்சுபிஷியைப் பிரதிநிதிக்கும் ‘சைக்கிள் அன்ட் கேரேஜ்’ நிறுவனம் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

வாகனச் சோதனை தேவைகளில் ஏற்பட்ட மாற்றத்தாலும், மேம்படுத்தப்பட்ட வாகன கரிம வெளியேற்றத் திட்டத்தாலும் புதிய கார்களின் விற்பனையை ரத்து செய்வதற்கான திட்டம் முடிவுசெய்யப்பட்டதாக நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

இரண்டுமே அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நடப்புக்கு வரும்.

விதிமுறைகளுக்கு உட்பட்டு 2025 முதல் விற்பனையை மீண்டும் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!