லாரியில் சிக்கிக்கொண்ட 44 வயது ஆடவர் மீட்பு

புதன்கிழமை மதியம் நடந்த வாகன விபத்தில், சிதைந்துபோன லாரியில் சிக்கியிருந்த 44 வயது ஆடவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டனர்.

புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச்செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் நடந்த அந்த விபத்து பற்றி பிற்பகல் 3.20 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் பதிவு தெரிவித்தது.

கனரக லாரியும் சரக்கு லாரியும் மோதிக்கொண்ட அந்த விபத்தில், சரக்கு லாரி சிதைந்து போயிருந்தது.

சரக்கு லாரியின் ஓட்டுநர் தனது இருக்கையில் சிக்கிக்கொண்டிருந்தார். வாகனத்தின் முன்பகுதி உட்புறமாக நசுங்கிப் போயிருந்ததால், அவரது கால்கள் இரண்டும் மாட்டிக்கொண்டிருந்தன.

குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். மீட்புப் பணியாளர்கள் அவரை விடுவிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

ஓட்டுநரின் இடது பாதம் சிக்கிக்கொண்டிருந்த கிளட்ச் மிதிகட்டை வெட்டி அகற்றப்பட்டது.

ஓட்டுநர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!