சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டதால் ஐந்தறை வீவக வீடு இழப்பு

சொத்து முதலீட்டாளர் ஒருவர் ஐந்தறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டை வாங்கி அதை சட்டவிரோதமாக வாடகைக்கு விடும் முயற்சியில் இறங்கினார்.

அதற்கு வகைசெய்ய விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாத சொத்துச் சந்தை முகவர் ஒருவரின் சேவையையும் அவர் நாடியிருக்கிறார்.

வீவக வீட்டு உரிமையாளர்கள் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டத்துக்கு (மினிமம் ஆக்கியுப்பே‌ஷன் பீரியட்) தங்கள் வீட்டில் வசித்த பிறகே அதை வாடகைக்கு விடவோ விற்கவோ முடியும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் அத்தகைய விதிமுறைகளை மீறினார்.

அதற்காக அவரின் சொத்துச் சந்தை முகவர் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

ஒரே மாதத்தில் உண்மை வெளிவந்தது. இதனால் அந்த உரிமையாளர் தனது வீவக வீட்டை இழக்க நேரிட்டது. அதில் வாடகைக்கு இருந்த குடும்பம் குறுகிய காலத்தில் வெளியேற வேண்டியிருந்தது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அந்த வீட்டை எடுத்துக்கொண்டது.

சம்பந்தப்பட்ட சொத்து முகவர் நான்கு மாதங்களுக்குத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அபாரதமாகவும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காகவும் அவர் 7,000 வெள்ளி செலுத்த வேண்டியிருந்தது.

இதுபோல் விதிமுறைகளை மீறும் பல வீட்டு உரிமையாளர்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கண்டுபிடித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!