கரிம ஊக்கப் புள்ளிகள்: ஒத்துழைக்க சிங்கப்பூர், பாப்புவா நியூ கினி இணக்கம்

கரிம ஊக்கப் புள்ளிகள் தொடர்பான ஒப்பந்தத்தை அமல்படுத்த சிங்கப்பூரும் பாப்புவா நியூ கினியும் இணங்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் பருவநிலை இலக்குகளை எட்ட இந்த ஒப்பந்தம் உதவும் என்று கூறப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தத்தில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, பாப்புவா நியூ கினி சுற்றுப்புற, பழமைப் பாதுகாப்பு, பருவநிலை அமைச்சர் சிமோ கிலேப்பா இருவரும் கையெழுத்திட்டனர்.

இதன் தொடர்பில் இரு நாடுகளும் சென்ற ஆண்டு காப் 27 பருவநிலை மாநாட்டில் இணக்க குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டது நினைவுகூரத்தக்கது.

அத்துடன், இதுவே முதன் முதலாக கையெழுத்திடப்பட்ட அமல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் என்று வர்த்தக, தொழில் அமைச்சு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவை கூட்டாக வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளன. .

இந்த ஒப்பந்தம் கரிம ஊக்கப் புள்ளிகளை ஏற்படுத்துவது, அவற்றை சிங்கப்பூர், பாப்புவா நியூ கினி இரு நாடுகளும் அனைத்துலக ரீதியில் பரிமாறிக் கொள்ள ஏதுவான கட்டமைப்பு, நடைமுறைகள் ஆகியவற்றை உருவாக்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!