நிக்கல் நெடுஞ்சாலையில் விபத்து; சைக்கிளோட்டி மரணம்

நிக்கல் நெடுஞ்சாலையில் டிசம்பர் 19ஆம் தேதி காலையில் மோதிவிட்டு தப்பியோடிய சம்பவத்தில் சைக்கிளோட்டி ஒருவர் மரணமடைந்தார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு டிசம்பர் 20ஆம் தேதி பதிலளித்த காவல்துறை, அந்த 45 வயது சைக்கிளோட்டி மயக்கநிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் பின்னர் அவர் மரணமுற்றார் என்றும் தெரிவித்தது.

படுகாயமுற்ற சைக்கிளோட்டி டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

டிசம்பர் 19ஆம் தேதி, குலிமார்ட் ரோட்டை நோக்கிச் செல்லும் நிக்கல் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த ஒரு காரும் ஒரு சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்து பற்றி காலை 5.07 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

இதில் சம்பந்தப்பட்ட காரோட்டியான 33 வயது ஆடவர், விபத்து நடந்த இடத்தில் நிற்காமல் சென்றுவிட்டார்.

அவர் பின்னர், ஆபத்தான முறையில் காரோட்டி, மரணம் விளைவித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். காவல்துறையின் புலனாய்வு தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!