ஆபத்தான ஆயுதம் வைத்திருந்ததாக செங்காங்கில் 20 வயது ஆடவர் கைது

ஆபத்தான ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக செங்காங்கில் 20 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) பிற்பகல் 2.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததாக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் காவல்துறை தெரிவித்தது.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விரைந்து சென்ற ஏழு காவல்துறை அதிகாரிகள், காம்பஸ்வேல் போவ், புளோக் 278ஏ குடியிருப்புக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தை நோக்கிச் சென்றதைக் காணமுடிந்தது.

மாலை 4.40 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் அந்த இடத்துக்குச் சென்றபோது புளோக்கின் அருகே காவல்துறை வாகனங்களும் புலன்விசாரணைப் பிரிவின் வேன் ஒன்றும் காணப்பட்டன.

அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் தம்மை நோக்கி வந்த காவல்துறை அதிகாரிகள், கத்தியுடன் திரிந்த ஆடவர் ஒருவரை காணமுடிந்ததா என்று தம்மிடம் கேட்டதாக கட்டுமான ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர் புளோக்கில் வசிக்கும் பெண்மணி ஒருவர் கூறுகையில், “பிற்பகல் 2.30 மணியளவில் ஏராளமான காவல்துறை அதிகாரிகளையும் குறைந்தபட்சம் 10 கார்களையும் அந்த வட்டாரத்தில் கண்டதாக பல குடியிருப்பாளர்கள் பேசிக்கொண்டனர்,” என்றார்.

கைது செய்யப்பட்ட ஆடவரிடம் விசாரணை தொடருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!