பல்வேறு குற்றங்கள் தொடர்பாக ஆடவர் கைது

சாலையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டியது, மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, இரண்டு வாகனங்கள் மீது மோதிவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்றது உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 28 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 14ஆம் தேதியன்று இரவு 11.30 மணி அளவில் சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் கார் ஒன்று எதிர்திசையில் சென்றுகொண்டிருந்ததாக காவல்துறை தெரிவித்தது.

விரைவுச்சாலையிலிருந்து ஜாலான் காயுவில் வெளியேறும் இடத்துக்குப் பிறகு அந்த கார், வேறு இரண்டு கார்கள் மீது மோதியது. விபத்து நிகழ்ந்தும் அந்த காரை அதன் ஓட்டுநர் நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அந்த கார் எதிர்திசையில் சென்றதைக் காட்டும் காணொளி எஸ்ஜி ரோடு விஜிலேன்ட்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

சிறிது தூரத்தில், சாலையின் ஆக வலது தடத்தில் இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை காணொளி காட்டியது. அவற்றின் எச்சரிக்கை விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.

எதிர்திசையில் சென்ற கார் மேலும் ஒரு விபத்தில் சிக்கியதாக காவல்துறை தெரிவித்தது.

இதில் ஒரு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகின.

இரண்டாவது முறை விபத்துக்குள்ளாகியும் அந்த கார் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

“இதுகுறித்து விசாரணை மேற்கொண்டோம். அந்த கார் லென்டோர் அவென்யூவில் கண்டுபிடிக்கப்பட்டது. காரை ஓட்டிய 28 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் கார் ஓட்டியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் சில போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று காவல்துறை தெரிவித்தது.

23 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட மூவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும் செங்காங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுவதன் தொடர்பாக முதல்முறையாகக் கைது செய்யப்படுவோருக்கு ஓராண்டு வரை சிறை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இக்குற்றத்தைத் தொடர்ந்து புரிபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு $2,000 முதல் $10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தக் குற்றம் தொடர்பாக இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படுவோருக்கு அல்லது இக்குற்றத்தைத் தொடர்ந்து பலமுறை செய்பவர்களுக்கு $5,000 முதல் $20,000 வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

அனைத்து வகை வாகனங்கள் ஓட்டத் தடையும் விதிக்கப்படலாம்.

கைது செய்யப்பட்ட ஆடவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!