முதலீட்டு மோசடி: 20 பேரை ஏமாற்றிய ஆடவருக்குச் சிறை

ஆடவர் ஒருவர் தமது குடும்ப நண்பர்கள், தமக்குத் தெரிந்தவர்கள் என 20 பேரை முதலீட்டு மோசடியில் கிட்டத்தட்ட $2.5 மில்லியன் ஏமாற்றியுள்ளார்.

அந்தச் சம்பவங்கள் 2008ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடையே நடைபெற்றன.

முரளி கிருஷ்ணன் நாய்டு, 53, என்ற அந்த ஆடவர், அவர்களின் பணம் தமது மனைவி தொடங்கிய கடன்முதலை தொழிலில் முதலீடு செய்யப்படும் என்று அவர்களை நம்பவைத்தார்.

அந்த முதலீடுகளுக்காக பாதிக்கப்பட்டோரில் பலர் தங்களின் ஓய்வுக்கால கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டின.

ஒன்பது பேர் சம்பந்தப்பட்ட 17 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பிறகு சிங்கப்பூரரான அவருக்கு ஜனவரி 22ஆம் தேதி ஏழாண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் 43 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அவர் இதுவரை எடுத்த பணத்தை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஏமாற்றுக் குற்றத்திற்காக ஒருவருக்குப் பத்தாண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!