போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததாக ஆடவர் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள்

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேரில் சு ஜியாங்ஃபெங் மீது பிப்ரவரி 8ஆம் தேதி மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த பத்து பேர் தொடர்பான வழக்கு, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் தொடர்பாக சிங்கப்பூரில் நடத்தப்படும் ஆகப் பெரிய வழக்கு.

சீன நாட்டவராக இருந்து, பிறகு வனுவாட்டு நாட்டு குடியுரிமை பெற்ற 35 வயது சு, வங்கிகளிடம் போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

சீன நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை என்று கூறி போலி ஆவணங்களை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியிடமும் சிங்கப்பூர் வங்கியிடமும் அவர் சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவின் வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறுகிறது.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் இந்த வழக்கு தொடர்பாக $3 பில்லியன் பெறுமானமுள்ள சொத்துகளும் விலைமதிப்புமிக்க பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

207 சொத்துகள், 77 வாகனங்கள், வங்கிக் கணக்குகளில் $1.45 பில்லியனுக்கும் அதிகமான பணம், பல்வேறு நாணயங்களில் $76 மில்லியனுக்கும் அதிகமான ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!