உரிமம் இல்லாத நாணய மாற்று செயல்பாடுகள்: 15 பேர் மீது விசாரணை

மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் உரிமம் இல்லா பணமாற்று, பணம் அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் விசாரணையை எதிர்நோக்குகின்றனர்.

அவர்கள் 28 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் எட்டு பேர் ஆண்கள், எழுவர் பெண்கள் என்றும் அவர்கள் பிப்ரவரி 5, 6 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல்துறை பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் காவல்துறை விசாரணையில் உதவி வருகின்றனர்.

மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் காவல்துறை மேற்கொண்ட இரண்டு நாள் நடவடிக்கையில், $140,000க்கு மேற்பட்ட மதிப்புள்ள சூதாட்டச் சில்லுகள், ரொக்கம், கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேகப் பேர்வழிகள் 15 பேரும், வெளிநாட்டு பணமாற்று, பணம் அனுப்பும் நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களிடம் சூதாட்டச் சில்லுகள் விற்பது, வாங்குவது போன்ற உரிமம் இல்லா சேவைகளை வழங்கி வந்ததாக நம்பப்படுகிறது.

உரிமம் இல்லாமல் பணம் தொடர்பான சேவைகளை வழங்கும் வர்த்தகத்தை மேற்கொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு $125,000 வரையிலான அபராதம், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

சூதாட்டக்கூடத்தில் விளையாடுவதற்குத் தவிர, சூதாட்டச் சில்லுகளைப் பயன்படுத்துவோரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு $10,000 வரையிலான அபராதம் அல்லது 12 மாதங்கள் வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!