கிண்டர்லேண்டின் இரண்டு பாலர் பள்ளி நிலையங்களுக்கு மார்ச் 24ஆம் தேதி காலாவதியான பிறகு ஆறு மாதங்களுக்கு மட்டுமே உரிமம் நீட்டிக்கப்படும் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு பிப்ரவரி 20ஆம் தேதி தெரிவித்துள்ளது.
உட்லண்ட்ஸ் மார்ட், சன்ஷைன் பிளாசா ஆகிய இரண்டு இடங்களில் கிண்டர்லேண்டின் பாலர் பள்ளிகள் செயல்படுகின்றன.
2023ல் இங்கு குழந்தைகள் தவறான முறையில் கையாண்ட சம்பவங்களைத் தொடர்ந்து கிண்டர்லேண்ட் நிர்வாகம், சுயேச்சை குழுவை அமைத்து விசாரித்தது. அதில் கிண்டர்லேண்ட் தலைமையகம் தனது ஊழியர்களின் பயிற்சிகளையும் நிலையங்களை மேற்பார்வையிடுவதில் திறம்பட செயல்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கிண்டர்லேண்டு பாலர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிண்டர்லாண்ட் சம்பவங்களில் கற்றுக் கொண்ட பாடங்களை மற்ற பாலர் பள்ளிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இது, அனைத்து பாலர் பள்ளிகள் தங்களுடைய நடைமுறைகளைப் பரிசீலித்து மேம்படுத்த வழி வகுக்கும் என்று அமைப்பு குறிப்பிட்டது.
ஆகஸ்ட் 28ஆம் தேதி குழந்தைகள் தவறாகக் கையாண்ட சம்பவம் ஊடகங்களில் பரவிய காணொளி மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. முன்னாள் ஆசிரியையான லின் மின் தனது பராமரிப்பில் இருந்த 23 மாத குழந்தை உட்பட குழந்தைகளைத் தவறாகக் கையாண்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பான காணொளியில் அவர் ஒரு பெண் குழந்தையை தரையில் படுக்க வைத்து வாயில் வலுக்கட்டாயமாக தண்ணீர் ஊற்றுவதைப் பார்க்க முடிந்தது.
இதையடுத்து முன்னறிவிக்கப்படாத சோதனைகளை அந்நிலையத்தில் அமைப்பு மேற்கொண்டது.
மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கிண்டர்லேண்ட் பாலர் பள்ளி நிலையங்களுக்கு விதிக்கப்பட்டன.
அனைத்து ஊழியர்களுக்கு நடத்தை குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன. குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.ஒவ்வொரு நிலையத்திற்கும் $5,000 வீதம் மொத்தம் $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அந்நிறுவனத்தின் 3வது பாலர் பள்ளிக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
மற்றொரு விவகாரத்தில் கிண்டர்லேண்ட்@உட்லண்ட்ஸ் நிலையத்தில் பணியாற்றி முன்னாள் ஆசிரியையிடம் காவல்துறை விசாரணை நடத்தி குழந்தையை தவாறகக் கையாண்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.