வயதான ஊழியர்களுக்கு உதவும் மானியத்தை 480 நிறுவனங்கள் பெற்றன

வயதான ஊழியர்களுக்கு எதிர்கால வேலை திட்டத்தை அமைக்கவும் அவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பை உருவாக்கவும் வழங்கப்படும் மானியத்தை 480 நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் மானியங்களை நிறுவனங்கள் வாங்கியதாக சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

வயதான ஊழியர்களுக்கு வழங்கும் மானியத்தை முதலாளிகள் சம்மேளனம் நிர்வாகம் செய்கிறது.

மானியத்தின் மூலம் கிட்டத்தட்ட 3,200 மூத்த ஊழியர்கள் பயனடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கவும் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

மானியத்திற்காக விண்ணப்பிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் உணவு பானம், சில்லறை வர்த்தகம், சுத்தம் செய்யும் பணி, பாதுகாப்பு பணி போன்ற துறையைச் சேர்ந்தவர்கள் என்று சம்மேளனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 75 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் 6,300க்கும் அதிகமான நிறுவனங்களில் 50,000க்கும் அதிகமான வயதான ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிர்கால வேலை திட்ட பயிற்சியும், பகுதி நேர வேலை வாய்ப்பை உருவாக்கவும் நிறுவனங்களிடம் பேசி வருவதாக மனிதவள அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!