குடியிருப்புப் பகுதியாக கில்மன் பேரெக்ஸ் மாற்றப்படக்கூடும் என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மார்ச் 5 தேதி தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 6.6 ஹெக்டர் நிலப்பரப்பில் உள்ள அந்த இடத்தில் கலை நிலையங்கள், உணவகங்கள் என பல கடைகள் உள்ளன.
புதிய அறிவிப்பால் தங்களது குத்தகைக் காலம் குறித்து அவசர அவசரமாக முடிவுகள் எடுக்கமாட்டோம் என்றும் அதிகாரிகளிடம் பேச காத்திருப்பதாகவும் அங்கு செயல்படும் கடைகள் தெரிவித்துள்ளன.
கில்மன் பேரெக்சில் உள்ள 11 கலை நிலையங்கள் தங்களது குத்தகைக் காலம் 2030ஆம் வரை இருப்பதாகவும் அதிகாரிகளுடன் பேசி நல்ல திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தன.
கில்மன் பேரெக்சில் கலை நிலையம் வைத்திருப்பது எங்களுக்கு பெருமை. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடத்தில் எங்கள் கலைகள் உள்ளன. சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து இருதரப்புக்கும் ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும் என்று தான் நம்புவதாக சுந்தரம் தாகூர் நிலையத்தின் உரிமையாளர் சுந்தரம் தாகூர் தெரிவித்தார்.