தீவு விரைவுச்சாலையில் விபத்து: பல வாகனங்கள் சேதம், மருத்துவமனையில் அறுவர்

தீவு விரைவுச்சாலையில் பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து, ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து ஏப்ரல் 22ஆம் தேதி இரவு நிகழ்ந்தது.

துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் புக்கிட் தீமா விரைவுச்சாலை நுழைவாயிலுக்கு முன்பாக விபத்து ஏற்பட்டுள்ளதாக இரவு சுமார் 9.40 மணி அளவில் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

விபத்தில் சிக்கியவர்களில் மூவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் மற்ற மூன்று பேர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் குறைந்தது நான்கு கார்கள் சேதமடைந்ததாக டெலிகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் பார்க்க முடிந்தது.

விபத்து காரணமாக விரைவுச்சாலையின் இடது பக்கத்தில் உள்ள இரண்டு சாலைத் தடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!