‘பேன்யான் ஹோம் அட் பெலாங்கி வில்லேஜ்’ தாதிமை இல்லத்தில் வசித்த 70 வயது சுப்பிரமணியம் தர்மலிங்கம், ஏப்ரல் 19ஆம் தேதி செங்காங் பொது மருத்துவமனையில் காலமானார்.
இவரது நெருங்கிய உறவினர்கள் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவரைப் பற்றிய தகவல் அறிந்தோர், 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப் பக்கம் வாயிலாகத் தங்களுக்குத் தெரிந்த விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.
பெறப்படும் தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை உறுதிகூறியது.