2,000 மின்சார வாகன மின்னூட்டிகள் பதிவு

இவ்வாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி சிங்கப்பூரில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் சுமார் 2,000 மின்சார வாகன மின்னூட்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

வரும் ஜூன் மாதம் ஏழாம் தேதிக்குள் பதிவுசெய்தால் மட்டுமே தற்போது விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்பட்டுவரும் மின்னூட்டிகளைத் தொடர்ந்து உபயோகிக்கமுடியும். மின்சார வாகன மின்னூட்டல் தொடர்பில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் தேதியன்று நடப்புக்கு வந்த சட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

இந்நிலையில், மின்னூட்டிகள் வேகமாகப் பதிவுசெய்யப்பட்டு வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

இதுவரை புதிவுசெய்யப்பட்ட மின்சார வாகன மின்னூட்டிகளில் பாதி, தனிநபர்களுக்குச் சொந்தமானவை என்றும் மற்றவை மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் போன்றவற்றுக்குச் சொந்தமானவை என்றும் ஆணையம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

புதிய மின்னூட்டிகளும் பதிவுசெய்யப்படவேண்டும். பதிவுசெய்யப்பட்ட மின்னூட்டிகளுக்கு அதிகாரபூர்வ ஒட்டுவில்லைகள் வழங்கப்படும்.

பதிவுசெய்யப்படாத மின்னூட்டியைப் பயன்படுத்தும் உரிமையாளருக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மின்னூட்டிகளைப் பதிவுசெய்வதற்கான கட்டணம் $750. ஜூன் ஏழாம் தேதிக்குள் பதிவுசெய்வோர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!