சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரர்களின் ஒற்றுமை புவிசார் அரசியல் சூழலால் சோதனைக்கு ஆளாகும் நிலையில், முழுமைத் தற்காப்பு என்பது ஒரே நிலையில் தேங்கி நிற்கும் ஒரு கருத்துப் படிவமாக இருக்க முடியாது.
சிங்கப்பூருக்குள் வரும் சரக்கை கையாள்வதற்கு சேட்ஸ் நிறுவனம் கிலோகிராமுக்கு நான்கு காசுகள் என விதிக்க இருந்த புதிய கட்டணம் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் ஒருவரிடம் பொய்த்தகவல் தந்த குற்றத்தை வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) அன்று ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரின் உற்பத்தித்துறை வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் மார்ச் மாதத்தில் 9.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வாண்டு தமிழ்மொழி விழா, மார்ச் 28ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.