போர்க்களமான ஆடுகளம்; நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் மோதிக்கொண்டதில் அறுவர் காயம்

நடுவர் பவுண்டரி தராததால் சண்டை மூண்டது

மிர்பூர்: நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது விளையாட்டாளர்கள் மோதிக்கொண்டதில் அறுவர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பங்ளாதேஷின் மிர்பூர் நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்ற அந்த மூன்று நாள் போட்டித்தொடர் அங்குள்ள ஷகீத் சுரவார்டி உள்ளரங்கில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமையன்று முகம்மது முஸ்தபா கமால் ராஸ் அணியும் திபங்கர் திப்பன் அணியும் பொருதியது.

அப்போது, பவுண்டரி குறித்த நடுவரின் முடிவு தொடர்பில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறையில் முடிந்தது.

அறை, குத்து என ஒருவருக்கொருவர் மாறி மாறித் தாக்கிக்கொண்டனர். இருதரப்பினரும் ஒருவர்மீது ஒருவர் நாற்காலிகளையும் தூக்கி வீசினர்.

ராஸ் அணியினர் வெளியிலிருந்து ஆள்களை அழைத்து வந்து தாக்கியதாக, திபங்கர் அணியைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, அந்த நட்புமுறை போட்டித் தொடர் ரத்துசெய்யப்பட்டது.

இம்மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்குபெறும் பங்ளாதேஷ் அணிக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் நட்சத்திரங்கள் பங்கேற்கும் போட்டித் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!