சென்னை சேப்பாக்கம் திடலில் சென்னை
சூப்பர் கிங்ஸ் ஞாயிற்றுக் கிழமை தனது கடைசி லீக் ஆட்டத்தை ஆடியது. அத்துடன்,
இந்தப் பருவத்தோடு டோனி ஓய்வுபெறுவார் என்று பேசப்பட்டு வருகிறது. இவ்விரண்டு காரணங்களால் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்த னர். போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஐபிஎல் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் திடலுக்குள் ஓடிவந்தார். டோனியின் அருகில் சென்ற அவர், தமது சட்டையில் கையெழுத்திடுமாறு (ஆட்டோகிராஃப்) கேட்டுக்கொண்டார். புன்னைகை பூத்தவாறே கவாஸ்கரின் சட்டையில் டோனி கையெழுத்திட்டார். பின்னர் அவரை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.