நோம்பென்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி களில் நேற்று நடைபெற்ற மகளிர் இலகுரக வாள்வீச்சுப் போட்டியில் சிங்கப்பூர் அணி தனது தங்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. நால்வரை உள்ளடக்கிய சிங்கப்பூர் குழு வியட்நாம் குழுவை 45-23 என்னும் புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது.
நேற்றைய போட்டியில் சிங்கப்பூர் குழுவில் இடம்பெற்ற மேக்ஸைன் வோங் ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை ஒற்றையருக்கான போட்டியில் பட்டம் வென்றிருந்தார். மகளிர் குழுப் போட்டியில் சிங்கப்பூர் ஏற்கெனவே 2015, 2019, 2022 ஆண்டு களில் பெற்ற வெற்றியை நேற்றும் தொடர்ந்தது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளிலும் அது தங்கம் வென்று சாதித்துள்ளது. 2017 போட்டிகளில் வாள்வீச்சு சேர்க்கப்படவில்லை.
மகளிர் வென்றபோதிலும் வாள்வீச்சில் சிங்கப் பூரின் ஆண்கள் குழு நேற்றைய இறுதிப்போட்டியில் நடப்பு வெற்றியாளர் வியட்னாமிடம் வெற்றியைப் பறிகொடுத்தது. இருப்பினும், ஆண்கள் குழு இதுவரை இறுதிப்போட்டிக்குச் சென்றதில்லை
என்ற வரலாறு நேற்று திருத்தி எழுதப்பட்டது.