நோம்பென்: தென்கிழக்காசிய விளையாட்டுகளின் பெண்கள் ஒற்றையர் மேசைப்பந்தில் காலிறுதிச் சுற்றில் வெளியேற்றப்பட்டார் சிங்கப்பூர் வீராங்கனை சுவோ ஜிங்யி. எனினும், காலிறுதிச் சுற்றில் நடப்பு வெற்றியாளரான தாய்லாந்தின் ஒராவான் பரானாங்கிற்கு, சுவோ பெரும் சவாலாக இருந்தார்.
ஆட்டம் நடைபெற்ற மொரோடொக் டெக்கோ தேசிய விளையாட்டரங்கில் சிங்கப்பூர் குழுவினர் அவரின் முயற்சிக்கு எழுந்து நின்று கைதட்டினர். 4-3 (5-11, 11-5, 7-11, 11-7, 10-12, 11-7, 12-10) எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியடைந்தார் சுவோ.